Healthy Club

Healthy Club We are on a mission to help more people to achieve their health and weight management goals. By 2025

கொசுக்கள் உங்க வீட்டிற்குள் நுழையாமல் இருக்க இந்த எளிய தந்திரங்களை சரியாக செய்தால் போதும்...நாம் இந்தியா போன்ற வெப்பமண்ட...
07/12/2021

கொசுக்கள் உங்க வீட்டிற்குள் நுழையாமல் இருக்க இந்த எளிய தந்திரங்களை சரியாக செய்தால் போதும்...

நாம் இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் போது, கொசு இல்லாத வீட்டைப் பெறுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. நம்மில் பெரும்பாலோர் கொசு விரட்டி ஸ்ப்ரே அல்லது கொசுவத்திகள் அல்லது திரவங்கள் வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை அகற்றும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை உருவாக்குவது தவிர வீட்டில் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு.

மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொசுக்களால் பரவும் ஆபத்தான நோய்களைத் தவிர, கொசுக்கள் தூக்கத்தைக் கெடுப்பதன் மூலம் மிகவும் எரிச்சலூட்டும், ஏனெனில் கொசு கடித்த பிறகு நீண்ட நேரம் அரிப்பு இருக்கும், மேலும் அவை எழுப்பும் சத்தம் உங்களை தூங்க விடாமல் தடுக்கும். சில எளிய வழிகளின் மூலம் கொசுக்களிடம் இருந்து நாம் தப்பிக்கலாம். இயற்கையான வழிகளில் கொசுக்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் வருவதை நிறுத்துங்கள்
கொசுக்கள் இல்லாத வீட்டை நீங்கள் விரும்பினால், முதலில் கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சாயங்காலம் மற்றும் சூரியன் மறையும் போது, உங்கள் நுழைவாயிலில் கொசுவலைகள் இணைக்கப்படவில்லை என்றால், எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக்கமாக மூடவும். சூரிய ஒளி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொசுக்களை விலக்கி வைத்தாலும், அந்தி வேளைக்குப் பிறகு அவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கொசுக்கள் வீட்டிற்குள் நுழையக்கூடிய கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றியுள்ள இடத்தைத் தடுக்கும் கதவு பட்டைகளை ஆன்லைனில் வாங்கலாம். இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டிற்குள் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்
வீட்டிலேயே கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நீங்கள் யோசித்தால் உங்கள் வீட்டிற்குள் எங்காவது கொசுக்கள் உற்பத்தியாகிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்கள் ஏசி அல்லது தோட்டத்தில் உள்ள குளம் தண்ணீர் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கலாம். வீட்டிற்குள் பழைய பொருட்களை அடுக்கி வைக்கும் ஸ்டோர்ரூம், சமையலறை மாடி போன்ற இடங்களில் கொசுக்கள் கூடு கட்ட வாய்ப்புள்ளதால், அவ்வப்போது அவற்றை சுத்தம் செய்யவும். உங்கள் வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் குறைவாக இருக்க உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள பள்ளங்களை நிரப்பவும், மேலும் வடிகால்களை மூடி அடிக்கடி சுத்தம் செய்யவும்.

கொசுக்களை விரட்டும் செடிகளை வளர்க்கவும்

வீட்டிற்குள்ளிருந்து கொசுக்களை விரட்ட எளிய வழி கொசு விரட்டி செடிகளை வீட்டிற்குள் வைப்பது. கொசுக்கள் இல்லாத வீட்டிற்கு இந்த செடிகளை உங்கள் அறைக்குள் அல்லது உங்கள் மேசைகளில் வைக்கலாம். இவற்றில் சில தாவரங்கள் கொசுக்களை மட்டுமல்ல, மற்ற பூச்சிகள் மற்றும் எலிகளையும் தடுக்கும். இந்த தாவரங்கள் பொதுவாக சிறியதாக இருக்கும், எனவே கொசுக்களை வீட்டிலேயே கட்டுப்படுத்த எளிதாக வீட்டிற்குள் வைக்கலாம். சாமந்தி, துளசி, எலுமிச்சை மரம் மற்றும் புதினா போன்ற உட்புற கொசு விரட்டி தாவரங்களை வளர்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் கிராம்புகளை வீட்டைச் சுற்றி வைக்கவும்

கிராம்பு மற்றும் சிட்ரஸ் வாசனையை கொசுக்கள் வெறுக்கின்றன. எனவே எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, கிராம்புகளை இரண்டு பகுதிகளிலும் குத்தி வையுங்கள். வீட்டிற்குள் கொசுக்களை விரட்ட இந்த கிராம்பு கலந்த எலுமிச்சையை தட்டுகளில் வைக்கவும். இது ஒரு இயற்கை மற்றும் பாதிப்பில்லாத உட்புற கொசு விரட்டியாகும்.

பூண்டு ஸ்ப்ரே

ரசாயனம் கலந்த கொசு ஸ்ப்ரேக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், கொசு இல்லாத வீட்டிற்கு பூண்டு ஸ்ப்ரே பயனுள்ளதாக இருக்கும். சில பூண்டு பற்களை நசுக்கி அல்லது நறுக்கி தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டைச் சுற்றி தெளித்து, வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்தலாம். பூண்டு பல நற்பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் வீட்டில் கொசுக்களை தவிர்க்க இவற்றைப் பயன்படுத்தலாம். பூண்டின் துர்நாற்றம் கடுமையானதாக இருக்கும், ஆனால் அது கொசுக்களை உடனடியாகக் கொல்லும்.

சோப்பு நீர்

சோப்பு நீர் உள்ள ஒரு பாத்திரம் உட்புற கொசு விரட்டியாக செயல்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டில் கொசுக்களைக் கட்டுப்படுத்த, உங்கள் வீட்டிற்குள் ஒரு பெரிய பாத்திரத்தில் சோப்பு தண்ணீரை வைக்கலாம். பாத்திரம் குமிழிகளால் மூடப்பட்டிருக்கும் அளவுக்கு சோப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். இதற்கு நீங்கள் ஒரு பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது துணி துவைக்கும் சோப்பைப் பயன்படுத்தலாம். கொசுக்கள் தண்ணீரால் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் இந்த சோப்பு நீரில் அமர்ந்தவுடன், அவை குமிழிகளில் சிக்கி இறந்துவிடும், இதனால் கொசு இல்லாத வீட்டை உங்களுக்கு வழங்குகிறது.

ஆல்கஹால்

நீங்கள் பீர் அல்லது வேறு ஏதேனும் மது அருந்தினால், வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை வெளியேற்ற இது ஒரு சிறந்த வழியாகும். கொசுக்களை கட்டுப்படுத்த உங்கள் வீட்டில் பீர் அல்லது ஆல்கஹாலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்தால் போதும். பீர் மற்றும் ஆல்கஹால் வாசனையை கொசுக்கள் தாங்க முடியாது, மேலும் இந்த முறை வீட்டிலிருந்து கொசுக்களை அகற்றும்.



எலும்புகள் வலு பெற, வாரம் ஒரு முறை பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கருப்பு உளுந்து சுண்டல் செய்வது எப்படி?பெண்கள் மட்டு...
05/12/2021

எலும்புகள் வலு பெற, வாரம் ஒரு முறை பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கருப்பு உளுந்து சுண்டல் செய்வது எப்படி?

பெண்கள் மட்டும் தான் இந்த கருப்பு உளுந்து சுண்டலை சாப்பிட வேண்டுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள் கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கருப்பு உளுந்து சுண்டல் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறும். இடுப்பு வலி மூட்டு வலி வராமல் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊட்டச்சத்து அதிகம் தேவை. மகப்பேறு காலங்களில் அவர்களுக்கு அதிகப்படியான வலியை தாங்கும் சக்தி தேவை. இதனால் இந்த கருப்பு உளுந்தை வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயமாக பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறுப்பு உளுந்து சுண்டல், உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி, எப்படி நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி தான். கருப்பு உளுந்தை சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கருப்பு உளுந்தை வைத்து சுண்டல் செய்வது எப்படி தெரிஞ்சுக்கலாம் வாங்க. கருப்பு உளுந்தை 1 கப் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் அந்த உளுந்தை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வறுத்தால் போதும். வறுத்த இந்த உளுந்தை ஒரு முறை நன்றாக கழுவி விட்டு, 1 கப் அளவு கருப்பு உளுந்துக்கு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரில் போட்டு 3 விசில் வைக்க வேண்டும்.

சில உளுந்து மூன்று விசில் வைத்தாலே பூப்போல வெந்துவிடும். சில உளுந்து வேக இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும். அது உளுந்தின் ரகத்தைப் பொறுத்தது. மூன்று விசிலில் உங்கள் உளுந்து வேகவில்லை என்றால் மீண்டும் குக்கரை மூடி போட்டு 2 விசில் விட்டு கொள்ளுங்கள். உளுந்து வேக வைக்கும்போது சிறிதளவு உப்பையும் போட்டு வேகவைத்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த இந்த உளுந்து அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், இரண்டாக கிள்ளிய வரமிளகாய் – 4, கறிவேப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக துருவிய இஞ்சி – 1/2 ஸ்பூன், சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், சேர்த்து வெங்காயத்தை நன்றாக வதக்கி விட்டு, இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போட்டு வதக்கி விட்டு, வெங்காயத்துக்கு மட்டும் 2 சிட்டிகை உப்பு தூளை தூவி, இறுதியாக வேக வைத்திருக்கும் சுண்டலை தண்ணீரை வடிகட்டி இந்த கடாயில் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி சூடு செய்து உப்பு சரி பார்த்து கொண்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சுடச்சுட கருப்பு சுண்டல் தயார். இந்த சுண்டலை சூடாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படியே சாப்பிடலாம்.

குக்கரில் பருப்பு வேக வைக்கும்போது நிறைய தண்ணீரை ஊற்றி வேக வைத்து அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடாதீர்கள். தண்ணீரில் சத்து போய்விடும். முடிந்தவரை தண்ணீர் மீதம் இல்லாதபடி சரியான அளவு தண்ணீரை ஊற்றி உளுந்தை வேக வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தண்ணீரை வடிகட்டி குடித்து விடுங்கள்.

பருப்பை ரொம்ப ரொம்ப கொழகொழவென வேக வைத்து விட்டாலும் சுண்டல் சுவையாக இருக்காது. உங்களுக்கு இந்த சிம்பிளான ஆரோக்கியமான ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க..

உங்கள் ஆரோக்கியம்...
உங்கள் கையில்.....

✅ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள்
✅ உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சத்துப் பொருள் தேவைப்படுகிறது.
✅ ஒவ்வொரு அளவில் அது தேவையாக இருக்கிறது
✅ உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஆலோசகர் தேவை.
✅ உங்களுக்கு இரண்டு தேர்வுகள்,

ஒன்று நல்ல
🍓Wellness Coach
அல்லது

ஒரு நல்ல
💊மருத்துவர்.

💚 உங்கள் தேர்வு நல்ல wellness Coach என்றால்
ஒரு சரியான தேர்வு.

 #கொய்யா....டயட் மூலம் உடல் எடை குறைப்போருக்கு  #கொய்யா பழம் உதவுமா.? கொய்யா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். ஆனால்...
27/11/2021

#கொய்யா....
டயட் மூலம் உடல் எடை குறைப்போருக்கு #கொய்யா பழம் உதவுமா.?

கொய்யா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம். ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு இதை சாப்பிடலாமா என்ற தயக்கம் உண்டு. அவர்களுக்காகவே இந்த கட்டுரை...

கொய்யா குறைந்த கலோரி கொண்ட பழம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாறாக கட்டுப்படுத்தும். அதோடு உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. டயட் முறையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது கட்டாயம் உதவும். எப்படி தெரியுமா..?

கொய்யா பழம் நிறைய நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும். எப்போதும் நிறைவாகவே உணர்வீர்கள்.

இதனால் நீங்கள் எந்த உணவையும் தேடி சாப்பிட மாட்டீர்கள். குறிப்பாக டயட் இருப்போருக்கு வரும் Food Craving இருக்காது. இதனால் நீங்கள் பயமின்றி கொய்யாவை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக இது குறைந்த கலோரி கொண்டது. ஆனால் அதிக ஆற்றல் தரக்கூடிய பழம். டயட்டின் போது விரைவில் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பீர்கள். அவர்களுக்கு கொய்யா நல்ல பலன் தரும். நாள் முழுவதும் சோர்வின்றி இருப்பீர்கள்.

கொய்யாவில் நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன் , வைட்டமின்கள் , மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் குறைவின்றி கிடைக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர் #ஷில்பா_அரோரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” கொய்யா ஹார்மோன் சமநிலையின்மையை போக்க உதவும் சிறந்த பழம், நீரிழிவு நோயாளிகள், உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் தாராளமாக சாப்பிடலாம்” என கூறியுள்ளார்.

மருத்துவர் #மனோஜ்_கே_ஹஜா பேசுகையில் “ கொய்யா பழம் மாங்கனீசு நிறைந்தது. இதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும் ஆற்றலை அளிக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து செரிமானமின்மை காரணமாக பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு கொய்யா சிறந்த நண்பன் என்கிறார். எனவே தினமும் ஒரு பவுல் சாப்பிடலாம் என்கிறார். அதுமட்டுமன்றி மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொய்யா பழம் உதவும்.

உங்கள் ஆரோக்கியம்...
உங்கள் கையில்.....

✅ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள்
✅ உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சத்துப் பொருள் தேவைப்படுகிறது.
✅ ஒவ்வொரு அளவில் அது தேவையாக இருக்கிறது
✅ உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஆலோசகர் தேவை.
✅ உங்களுக்கு இரண்டு தேர்வுகள்,
ஒன்று
நல்ல
🍓Wellness Coach
அல்லது
ஒரு நல்ல
💊மருத்துவர்.
💚 உங்கள் தேர்வு நல்ல wellness Coach என்றால்
ஒரு சரியான தேர்வு.

கேரட் – பீட்ரூட் ஜூஸ்!சரும பொலிவு, ஊட்டச்சத்துக்கள்… ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கேரட் – பீட்ரூட் ஜூஸ்! இந்த அற்புதமா...
22/11/2021

கேரட் – பீட்ரூட் ஜூஸ்!

சரும பொலிவு, ஊட்டச்சத்துக்கள்… ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கேரட் – பீட்ரூட் ஜூஸ்!
இந்த அற்புதமான கேரட் பீட்ரூட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது.

பருவ மாற்றம் ஏற்பட்டு வரும் இந்த தருணத்தில் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும் உணவுகளை தெரிவு செய்து உட்கொள்ளல் வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். அந்த வகைகள் இந்த குளிர்கால பருவத்தில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை நமது உணவுகளுடன் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக வேர் காய்கறிகளான கேரட் மற்றும் பீட்ரூட்டை நமது அன்றாட உணவு மற்றும் ஜூஸ்களுடன் சேர்த்துகொள்து மிகவும் நல்லது.

இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும், இவை சரும பொலிவு மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

இந்த அற்புதமான வேர் காய்கறிகளில் எப்படி சிம்பிள் செய்முறையில் ஜூஸ் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

கேரட் – பீட்ரூட் ஜூஸ் செய்யத் தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – பாதி
கேரட் – 4
இஞ்சி – சிறிய துண்டு
தண்ணீர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

கேரட் – பீட்ரூட் ஜூஸ் செய்முறை:

முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
பின்னர், அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.

இப்போது அவற்றை வடிகட்டி பருகி மகிழவும்.

இந்த அற்புதமான கேரட் பீட்ரூட் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது. நீங்கள் விரும்பினால் இவற்றுடன் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் ஆரோக்கியம்...
உங்கள் கையில்.....

✅ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள்
✅ உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சத்துப் பொருள் தேவைப்படுகிறது.
✅ ஒவ்வொரு அளவில் அது தேவையாக இருக்கிறது
✅ உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஆலோசகர் தேவை.
✅ உங்களுக்கு இரண்டு தேர்வுகள்,
ஒன்று நல்ல
🍓Wellness Coach
அல்லது
ஒரு நல்ல
💊மருத்துவர்.
💚 உங்கள் தேர்வு நல்ல wellness Coach என்றால் Healthy Club ஒரு சரியான தேர்வு.

குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..குளிர்காலத்தில் சோம்பேறித்தனமாக உணர்பவர்கள் இப்படி செய்து உடலை ஃ...
11/11/2021

குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..

குளிர்காலத்தில் சோம்பேறித்தனமாக உணர்பவர்கள் இப்படி செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளுங்கள்..

உடல் எடையை குறைப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை, குறிப்பாக குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது ஒரு சவாலான ஒன்றே. குளிர்காலத்தில் அதிகாலையில் எழுந்து ஜாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது கடினமானது, மேலும் இத்தகைய காலத்தில் குறைவான அளவே தண்ணீர் குடிக்கிறோம்.

சூரிய ஒளி குறைவதால் நம் உடலுக்கு குறைந்த அளவே வைட்டமின் டி கிடைக்கிறது இந்த காரணங்களால் தான் குளிர்கால உடல் எடை குறைப்பு கடினமாக இருக்கிறது. இதனால் நாம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை பராமரித்து கட்டுக்கோப்பாக இருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர உங்கள் தினசரி உணவில் சில மாற்றங்களை செய்வது நல்ல பலனை தரும்.குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

போதுமான தண்ணீர் அருந்துங்கள் : ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உங்களை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். குளிர்காலத்தில் தண்ணீருக்கு பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் குளிர்காலங்களிலும் உங்களை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாகும். தினமும் போதுமான தண்ணீரை எடுத்துக்கொள்ளாவிட்டால் பசி அதிகரிக்கும், மேலும் உடலின் கொழுப்பு எரியும் திறன் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். சீரான நேர இடைவெளியில் குறைந்தது தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் கொழுப்பு சேர்க்கையை கரைக்க உதவுகிறது

மேலும் நம் உடலில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. தண்ணீர் அருந்துவது தேநீர் மற்றும் காபி உட்கொள்ளலைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சாதாரண தண்ணீரை குடிக்க கடினமாக இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு, சிறிது அரைத்த இஞ்சி மற்றும் ஒரு சில புதினா இலைகள் சேர்த்து பருகவும்.

உடற்பயிற்சி செய்யுங்கள் : இந்த குளிர்காலத்தில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமான ஒன்றாகும். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தால் ஜிம்கள் மூடி இருந்ததால் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை இருந்தது. குளிர்காலத்தில் காலையில் ஒரு கப் சூடான காபி குடிப்பதை தவிர சிறந்தது எதுவுமில்லை. குளிர்காலத்தில் பெரும்பாலும் நமது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்கை தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இது தவறு. உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பதால் குறைவான கலோரிகளை எரிக்கிறோம், இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஜிம்மிற்கு செல்வது அல்லது வாக்கிங் செல்வது போன்றவற்றை நீங்கள் விரும்பவில்லை என்றால், சுறுசுறுப்பாக இருக்க வீட்டிலேயே எளிய உடற்பயிற்சி செய்யுங்கள். படிக்கட்டு பயிற்சி மற்றும் நடனம் ஆகியவற்றை மேற்கோள்வது குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருக்க சிறந்த வழிகளாகும்.

சூப் குடிங்கள் : குளிர்காலத்தில் சூப் ஒரு சுவையான ரெசிபியாகும். பல்வேறு சூப்கள் உள்ள நிலையில் அதன் சுவையாக பிரபலமானது, என்பதால் புறக்கணிக்க கடினமாக உள்ளது. குளிர்காலத்தில் குறைந்த வைட்டமின் டி மற்றும் செரோடோனின் அளவு காரணமாக கார்ப்ஸ் நிறைந்த உணவுகளை நோக்கி ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. நமது சோம்பேறித்தனம் காரணமாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம், பெரும்பாலும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் உங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு தடையாக உள்ளது. உங்கள் உணவில் காளான் போன்ற வைட்டமின் டி, பால், சால்மன், முட்டை மற்றும் செரோடோனின் நிறைந்த உணவுகளை சேர்க்கவும். மேலும் காலிஃபிளவர் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற கார்ப்ஸின் ஆரோக்கியமான காய்கறிகளையும் சேர்த்து கொள்வது நல்லது.

காற்றோட்டமாக இருங்கள் : வீட்டிற்குள்ளே அடைந்திருக்காமல் அவ்வப்போது காற்றோட்டமாக செல்வது நல்லது. ஒரே இடத்தில் இருப்பது உங்கள் மனநிலையையும், உங்கள் உணவுப் பழக்கத்தையும் பாதிக்கும். பொதுவாக நாம் சோர்வாகவோ, மன அழுத்தமாகவோ உணரும்போது, ஆரோக்கியமற்ற மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தேடுகிறோம். இந்த சிக்கலை சமாளிக்க, வெளியில் சிறிது நேரம் செலவழித்து உங்களை உற்சாகப்படுத்தும் விஷயங்களை செய்யுங்கள். அந்த நேரத்தில் வாழைப்பழங்கள், பெர்ரி, ஓட்ஸ் மற்றும் டார்க் சாக்லேட் போன்ற உணவுகளையும் நீங்கள் சாப்பிடலாம்.
News 18-Nwes-Lifestyle-Weightloss

உங்கள் ஆரோக்கியம்...
உங்கள் கையில்.....

✅ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள்
✅ உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சத்துப் பொருள் தேவைப்படுகிறது.
✅ ஒவ்வொரு அளவில் அது தேவையாக இருக்கிறது
✅ உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஆலோசகர் தேவை.
✅ உங்களுக்கு இரண்டு தேர்வுகள்,
ஒன்று நல்ல
🍓Wellness Coach
அல்லது
ஒரு நல்ல
💊மருத்துவர்.
💚 உங்கள் தேர்வு நல்ல wellness Coach என்றால் Healthy Club ஒரு சரியான தேர்வு.

புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்?ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ...
09/11/2021

புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்?

ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரதம் கொண்ட உணவுப் பழக்கங்கள் இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

உடல் எடை பராமரிப்பிற்கு உணவில் 20 சதவிகிதம் புரதம் இருக்க வேண்டும் என்றும், எடை இழப்புக்கு 25 சதவிகிதம் வரை புரதம் இருக்க வேண்டும் என்றும் பொதுவாக உயர் புரத உணவு முறைகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

புரோட்டீன் - எடை இழப்புக்கு உதவுகிறது. ஏனெனில் இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்து பசியில்லாமல் உணர வைக்கிறது. மூளையில் 'சாப்பிடுவதை நிறுத்து' என்ற சிக்னலைத் தூண்டும் குடல் ஹார்மோனை உற்பத்தி செய்வதுடன் இது தொடர்பு கொண்டிருக்கிறது.

ஆனால் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு, மலச்சிக்கல் மற்றும் வைட்டமின் குறைபாடு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும். அதனால், மற்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும், குறிப்பாக நார்ச்சத்துகளையும் நீங்கள் உட்கொண்டாக வேண்டும்.

அதே நேரத்தில் அதிகமாகப் புரதம் எடுத்துக் கொண்டால் அது உடல்நல ஆபத்துக்குக் காரணமாக அமையலாம் என சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே அதிக புரத உணவு முறையைப் பின்பற்றும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை இங்கே அறியலாம்.

நமக்கு ஏன் புரதம் தேவை?

புரோட்டீன் எனப்படும் புரதம் கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் உள்ளது. குறைந்தபட்சம் 10,000 வெவ்வேறு புரதங்கள் உண்டு. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் கட்டமைப்பதற்கான அடிப்படை இதுதான். உடலின் வளர்ச்சி, பழுதுபார்க்கும் பணிகளுக்கு புரதம் அவசியம்.

புரதம் அமினோ அமிலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. புதிதாகவும், சில நேரங்களில் பிற அமினோ அமிலங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இதை உடல் உருவாக்குகிறது. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உணவில் இருந்து கிடைக்கின்றன. விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதம் நமக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.

எவ்வளவு புரதம் உடலுக்குத் தேவை?

புரத பொடிகள் மற்றும் ஷேக்குகளை பலர் தங்கள் உணவில் சேர்க்கிறார்கள். ஷேக்கில் ஒரு பாட்டிலுக்கு 45 கிராமுக்கு மேல் புரதம் இருக்கும். உண்மையில் அவ்வளவு புரதம் நமக்குத் தேவையா? ஒவ்வொரு நாளும் உண்மையில் எவ்வளவு புரதம் தேவை, அதை உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது?

பிரிட்டனில் பெரியவர்கள் தங்கள் எடையில் உள்ள ஒவ்வொரு கிலோவிற்கும் 0.75 கிராம் புரதத்தை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். உதாரணத்துக்கு 70 கிலோ எடையுள்ளவராக இருந்தால், ஒரு நாளைக்கு 52.5 கிராம் புரதத்தை உண்ண வேண்டும். இது Reference Nutrient Intake (RNI) என்ற குறியீட்டின் அடிப்படையிலானது.

எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும் உள்ளங்கை அளவுக்கு புரதத்தை உள்கொள்ளலாம். சராசரியாக, ஆண்கள் 55 கிராம் மற்றும் பெண்கள் 45 கிராம் புரதத்தை தினமும் சாப்பிட வேண்டும். இது இறைச்சி, மீன், கொட்டை வகைகள், பருப்பு வகைகளின் இரு உள்ளங்கை அளவு.

ஆனால் பலரும் இதை மிக அதிகமாகவே சாப்பிட்டு விடுகிறார்கள். நேஷனல் டயட் மற்றும் நியூட்ரிஷன் ஆய்வின்படி படி, பிரிட்டனில் உள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்படுவதை விட 45-55 சதவீதம் அதிக புரதத்தை சாப்பிடுகிறார்கள்.

புரதத்திற்கான தற்போதைய RNI அளவை விட இரண்டு மடங்கு வரை சாப்பிடுவது பாதுகாப்பானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் அதிகப்படியான புரதத்தை சாப்பிடுவதால் "எந்த நன்மையும் இல்லை." என ஊட்டச் சத்து நிபுணர் ஹெலென் க்ராவ்லி கூறுகிறார்.

அதிக புரதம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

சில உயர் புரத உணவுகள் கூடுதல் கொழுப்பு மற்றும் உப்பு போன்றவற்றையும் விட ஆரோக்கியக் கேடானவை.

அதிகப்படியான புரதத்தை உட்கொண்டால் அதைச் செயலாக்கும் செய்ய வேண்டிய பெரும் பணி சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே சிறுநீரக நோய்கள் இருப்போருக்கு அதிகப்படியான மாமிச புரதம் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். சில நிபுணர்கள், அதிகப்படியான புரதம் எலும்பு வலிமையைப் பாதிக்கலாம் என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷன் கூற்றின்படி, அதிகப்படியான புரதம் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

சப்ளிமென்ட்ஸ் அவசியமா?

ஆரோக்கியமான உணவில் இருந்து நமது உடலுக்குத் தேவையான அனைத்து புரதத்தையும் பெற முடியும்.

வே புரோட்டின் போன்ற புரதப் பொடிகள் மற்றும் அதிக புரதம் கொண்டவை என சந்தைப்படுத்தப்படும் உணவுகள், இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. புரோட்டீன் ஷேக் மூலமாகவும் உணவில் கணிசமான அளவு கூடுதல் புரதத்தை சேர்க்கலாம்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களுக்கு தசை வளர்ச்சி மற்றும் உடற்பயிற்சிக்குப் பிந்தைய தசை மீட்புக்கு புரதம் உதவுகிறது. ஆனால் சில ஆய்வுகள் ஆரோக்கியமான உணவு மட்டுமே தசை மீட்புக்கு தேவையான புரதத்தை வழங்க முடியும் என்று கூறுகின்றன..
BBC News-உணவு, உடல்நலம், சமையல்

உங்கள் ஆரோக்கியம்...
உங்கள் கையில்.....

✅ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள்
✅ உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சத்துப் பொருள் தேவைப்படுகிறது.
✅ ஒவ்வொரு அளவில் அது தேவையாக இருக்கிறது
✅ உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஆலோசகர் தேவை.
✅ உங்களுக்கு இரண்டு தேர்வுகள்,
ஒன்று
நல்ல
🍓Wellness Coach
அல்லது
ஒரு நல்ல
💊மருத்துவர்.
💚 உங்கள் தேர்வு நல்ல wellness Coach என்றால் Healthy Club ஒரு சரியான தேர்வு.

 #உடல்_பருமனால்_உண்டாகும்_பாதிப்புகள்....அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத...
08/11/2021

#உடல்_பருமனால்_உண்டாகும்_பாதிப்புகள்....

அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.

பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு வயிற்றில் அதிகமாக சேருகின்றது. காலப் போக்கில் உடலெங்கும் வியாபித்து உடல் முழுவதையும் பருமனாக்கி விடுகிறது.

அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது. நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் உணவு மையம், திருப்தி மையம் என இரு பிரிவுகள் உள்ளன.

உணவு மைய பிரிவின் மூலம் நமக்குப் பசி உணர்வு தூண்டப்படுகிறது. தேவையான அளவு உணவை உட்கொண்ட பிறகு, திருப்தி மையத்தின் மூலம் போதும் என நினைக்கச் செய்கிறது. திருப்தி மையம் சரியாக செயல்படாமல் அதிகமாக தூண்டப்படும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு அதிகமாக சாப்பிடச் செய்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் உடல் எடை கூடிக் கொண்டே போகும்.

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி வேறு பல நோயினால் தாக்கப்படும் போதும், சிலவகை மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

📢 அதிக உடற்பருமனால் வரும் கேடுகள்:

⛔ பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.
⛔ அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
⛔ எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.
⛔ முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.

💔 இருதய நோய்களை உண்டாக்கும்.
🩸ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
🛑 சம்போக சக்தி குறைந்து விடும்.
👤 பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.

📢 உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.
📢 அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
🧑‍🦯 உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.

💊 அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.
❣️ நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.
😨 குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

🕴️இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.
🫁 பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

உங்கள் ஆரோக்கியம்...
உங்கள் கையில்.....

✅ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள்
✅ உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சத்துப் பொருள் தேவைப்படுகிறது.
✅ ஒவ்வொரு அளவில் அது தேவையாக இருக்கிறது
✅ உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஆலோசகர் தேவை.
✅ உங்களுக்கு இரண்டு தேர்வுகள், ஒன்று நல்ல
🍓Wellness Coach
அல்லது
ஒரு நல்ல
💊மருத்துவர்.
💚 உங்கள் தேர்வு நல்ல wellness Coach என்றால் Healthy Club ஒரு சரியான தேர்வு.



நாம் தினசரி உணவில் சேர்க்கும் வெங்காயத்தின் மலைக்கவைக்கும் 5 நன்மைகள்!வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை சாப்பிடுவது வய...
04/11/2021

நாம் தினசரி உணவில் சேர்க்கும் வெங்காயத்தின் மலைக்கவைக்கும் 5 நன்மைகள்!

வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை சாப்பிடுவது வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும்.

பொதுவாக சின்ன வெங்காயமோ பெரிய வெங்காயமோ சாம்பாரில் வெங்காயத்தை பார்த்தால் பலர் அதை தட்டின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு சாப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால், அந்த வெங்காயத்தை ஒதுக்கிவைப்பதன் மூலம் உங்கள் உடம்பிற்கு சேர வேண்டிய வைட்டமின், மினரல்ஸ் போன்றவற்றை இழக்கிறீர்கள். மேலும், வெங்காயம் இதய கோளாறு, வாய் புண் மற்றும் தலைவலிக்கு நல்ல மருந்தாகும். வெங்காயத்தின் 5 முக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1. ஊட்டச்சத்து:

வெங்காயத்தில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. மேலும், கலோரிகள் குறைவாகவும் வைட்டமின், மினரல் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

2. இதய ஆரோக்கியம்:

வெங்காயம் நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் அவை உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன. ட்ரைகிளிசரைட்களைக் குறைப்பதுடன் கொழுப்பின் அளவையும் குறைக்கின்றன. எனவே, இவை அனைத்தும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.

3. ஆன்டிஆக்ஸிடன்ட்கள்:

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரம் வெங்காயம் ஆகும். அவை 25க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஃபிளாவனாய்டு (flavonoid) ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.

4. புற்றுநோயை தடுக்கும்:

பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றை சாப்பிடுவது வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் குறைந்த அளவு வெங்காயம் உட்கொண்டவர்களைக் காட்டிலும் அதிக அளவு வெங்காயம் உட்கொண்டவர்கள் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்படுவது 22% குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

5. இரத்த சக்கரை அளவு கட்டுப்படும்:

வெங்காயம் சாப்பிடுவது இரத்த சக்கரையை கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோய் அல்லது ப்ரீடயாபிடீஸ் ஆகிய நோய் உள்ளவர்களுக்கு பெருமளவில் உதவும்.
Courtesy: News 18- News-
Lifestyle


மழைக்காலத்தில் மறந்தும் சாப்பிடக்கூடாத  #ஊட்டச்சத்து உணவுகளின் லிஸ்ட்!உங்கள் பகுதியில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் கா...
03/11/2021

மழைக்காலத்தில் மறந்தும் சாப்பிடக்கூடாத #ஊட்டச்சத்து உணவுகளின் லிஸ்ட்!

உங்கள் பகுதியில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பருவகாலமாக இருக்கும்போது மட்டுமே அதிக நன்மைகளை தரும்.

ஜன்னலின் ஓரம் உட்கார்ந்து, மழையின் சத்தம்,
மண்ணின் வாசனை,
குளிர்ந்த மற்றும் வசதியான சூழல், கோடைகாலத்தின் கடுமையான வெப்பத்திற்குப் பிறகு அமைதியான இதுபோன்ற ஒரு ‘வானவில் வாழ்க்கை’ பலருக்கு குழந்தை பருவ நினைவுகளை ஏற்படுத்தும்.

மழை என்பது, ஆண்டின் சிறந்த நேரமாக தோன்றினாலும், நாம் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இவற்றில் கவனம் செலுத்துங்கள்.

சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது:-

சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி-யின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது. ஆனால், இந்த பழங்களின் புளிப்பு காரணமாக, மழைக்காலத்தில் அவற்றைத் தவிர்க்கிறார்கள். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கும்.

ப்ரீபயாடிக் மற்றும்
புரோபயாடிக் உணவுகளைத் தவிருங்கள்:-

சிட்ரஸ் பழங்களைப் போலவே, மக்கள் தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளைத் தவிர்க்கிறார்கள். மழைக்காலங்களில், குடலுக்கு வலுவூட்டும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கவனித்துக் கொள்ளும் உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தயிர், மோர், ஊறுகாய், காய்கறிகள் போன்ற உணவுகள் குடலை நோயை எதிர்க்கும் கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
மேலும், குளிர்ந்த நீர் உங்கள் தொண்டைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகிறது.

பருவகால உணவுகளை புறக்கணித்தல்:-

ஹைப்பர்லோகல் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணம், உங்கள் பகுதியில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பருவகாலமாக இருக்கும்போது மட்டுமே அதிக நன்மைகளை தரும்.
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நன்மைகளை அவை தராது.

தள்ளுவண்டி கடைகளை அதிகம் நாடுவது:-

மழைக்காலங்கள் என்பது டீயுடன் பகோடா போன்ற வறுத்த பண்டங்களுக்கு அழைப்பு விடும். வறுத்த உணவுகள் வீக்கம் மற்றும் வயிற்று உபாதையை ஏற்படுத்தும். பருவமழையின் போது, ​​தாகம் ஏற்படாது, அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதைத் அவை தடுக்கின்றன. எனவே, எண்ணெய்யில் வறுத்த தின்பண்டங்களை தவிர்த்துவிட்டு, தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

News18 - News-Lifestyle

Address


Opening Hours

Monday 07:00 - 10:00
Tuesday 07:00 - 10:00
Wednesday 07:00 - 10:00
Thursday 07:00 - 10:00
Friday 07:00 - 10:00
Saturday 07:00 - 10:00

Telephone

+919786295548

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healthy Club:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share