18/08/2026
பரமநத்தத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் ஊரணி பொங்கல் விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பரமநத்தம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் யாதவகுல சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட குடிதெய்வமான அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஊரணி பொங்கல் விழா இன்று ஆவணி 01, செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி 43 கிராமங்களைச் சேர்ந்த யாதவ சமுதாயத்தினர் திரளாக கலந்து கொண்டனர். மணிமுத்தா நதிக்கரையில் அம்மனுக்கு ஸ்ரீ சக்தி கிரகம் ஜோடித்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்து, அமுது படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ரத உற்சவம் மற்றும் அம்மன் ஊர் உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவில் அகில இந்திய யாதவ மகாசபை தேசிய செயலாளர் மற்றும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட யாதவ சமுதாய தலைமை ஒருங்கிணைப்பாளர் R.J.D. பாஸ்கர் B.E. யாதவ் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி ப.பொன்னுசாமி யாதவ், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயி சுரேஷ் யாதவ், சந்தைப்பேட்டை நீதித்துறை ஓய்வு சுகுமார் யாதவ், திருவதிகை கீர்த்தி யாதவ், சென்ட்ரல் பாங்க் துணை மேலாளர் ஓய்வு, தொழுவந்தாங்கல் கண்ணன் யாதவ், நிருபர் சா.சி.அ.அழகிரி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும், இளைஞர் அணி நிர்வாகிகள் P.பாலாஜி B.E. யாதவ், M.சதீஷ் B.E. யாதவ், V.குகன் யாதவ், சிவராஜ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் 43 கிராமங்களைச் சேர்ந்த யாதவ சமுதாய மக்கள் ஒன்று கூடி, தங்களது குலதெய்வமான ஸ்ரீ கெங்கை அம்மனை வழிபட்டு, பக்தி மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். விழா சிறப்பாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.