10/01/2025
*சீர்திருத்த சிந்தனையில்*
குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மையை விதைத்தது நாம் தான்.
அது எப்போது என்று சற்று திரும்பிப் பார்ப்போம்
முதன்முதலில் பள்ளிக்கு அனுப்பும்போதே.
நீ தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோரும்,
வகுப்பில் நடத்தும் ஆசிரியரும், பள்ளி முதல்வரும், சமுதாயமும்
இப்படி மாறி மாறி பிஞ்சு மனதில் விஷ வேர்களை ஊன்றி விட்டால்
அந்த வேரில் விளைந்து வரும் கனியும் விஷத்தன்மை உடையதாகத் தானே இருக்க முடியும்!
சரி இதற்கு என்ன மாற்றுமுறை.
முயன்றதைப் படித்து தெளிவு கொண்டு முன்னேற்றம் கொள் என்று
பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைகளை போற்றி வளர்த்தால்
விளைவது கற்பக மரம் அருளும் அமுதமான கனியாகத் தானே வரும்.
பாடத்திட்டத்தில் ஒரு சில மாற்றம் தேவை
ஆமை மற்றும் முயல் கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அந்த கதையின் நீதி சரியானது என்றாலும் கூட அதில்
போட்டித் திறன் உள்ளது.
இதற்கான மாற்றுமுறை
கதையை வெற்றியோடு முடித்தவர்கள் அதனின் பின் விளைவை கவனிக்கவில்லை போலும்
இதோ உங்கள் சிந்தனைக்கு எமது கருத்து.
போட்டியில் வெற்றி பெற்ற ஆமை, முயலையும் தன் நண்பனாகவே கருதி,
மீண்டும் இரெண்டு பேரும் ஒன்றாகவே நடை பையின்று,
அப் பயணத்தில் குறுக்கே ஆறு வந்த போதும், ஆமை, முயலை தன் முதுகில் ஏற்றிச் சென்று மறு கரையை கடந்து இரெண்டுமே வெற்றி பெற்றதாக கதை இருந்திருந்தால்
குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
இப்படி அனைத்து பாடல்களும், கதைகளும் சிறு திருத்தம் பெற்றால்
பெரு மகிழ்ச்சி உலகில் பெருகி போட்டியில்லா பூலோகத்தை உருவாக்க முடியும் என்பதே எமது கருத்து
பாடத்திட்டம் மாறாவிட்டாலும் பரவாயில்லை,
வீட்டுப் பாடத்திட்டமாக மாற்றி அமைப்போம்
புது யுகத்தை உண்டாக்குவோம்
இப்படி இன்னும் நிறைய கதைகளுக்கும்,
பாடல்களுக்கும் திருத்தம் உண்டு,
தொடர்ந்து முயல்வோம்
ஆமையும், முயலும் போல ஒன்றாகவே பயணிப்போம்.
*சீர்திருத்த சிந்தனையில்*