தேசிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

  • Home
  • Sri Lanka
  • Puttalam
  • தேசிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

தேசிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் *மாற்றமே என்றும் மாறாதது*
Summary. A bio is a summary of a person's professional background, competency, and expertise in thei

பதவி விலக வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன!             #உலகசெய்திகள்
09/03/2026

பதவி விலக வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன!
#உலகசெய்திகள்

ஈரானுடனான தனது வலுவான உறவுகளை வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானுடனான தனது நட்புறவு வலுவானது என்றும், ஈரான் உதவிக்கு அ...
09/03/2026

ஈரானுடனான தனது வலுவான உறவுகளை வடகொரியா சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானுடனான தனது நட்புறவு வலுவானது என்றும், ஈரான் உதவிக்கு அழைக்கும் போதெல்லாம், அவர் உதவுவார் என்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதரிக்கத் தயாராக இருப்பார்.

மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், உலகளாவிய கூட்டணிகளும் உறவுகளும் புதிய வடிவத்தை எடுத்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது. தெளிவாகத் தெரிகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அறிக்கை உலக அளவில் ஒரு புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
🌍 இந்த வளர்ச்சி உலகளாவிய பாதுகாப்பு, இராஜதந்திர உறவுகள் மற்றும் புவிசார் அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்பதில் உலகம் முழுவதும் கண்கள் கவனம் செலுத்துகின்றன. அது நடக்கலாம்.

#உலகசெய்திகள்

 #உலகச்செய்தி  #பல அமெரிக்கா இராணுவ உயர் அதிகாரிகளை ஈரான் கைதுசெய்து வைத்துள்ளது  ஈரானுடன் யுத்தம் செய்து வெற்றி பெறலாம்...
09/03/2026

#உலகச்செய்தி
#பல அமெரிக்கா இராணுவ உயர் அதிகாரிகளை ஈரான் கைதுசெய்து வைத்துள்ளது ஈரானுடன் யுத்தம் செய்து வெற்றி பெறலாம் என்று டிரம்ப் பணப் பால் குடிக்கிறார்..
அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம்! ஏராளமான வீரர்களைச் சிறைபிடித்தது ஈரான்? மீட்புப் பணியில் 'டெல்டா' படைகள்?
​டெஹ்ரான் / வாஷிங்டன்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC), ஏராளமான அமெரிக்க ராணுவ வீரர்களைத் தாங்கள் சிறைபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

​ஈரானின் அதிரடி உரிமைக்கோரல்:
​ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் IRGC தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

​சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள்: அமெரிக்காவின் நேரடித் தாக்குதலின் போது, பல அமெரிக்க வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு தற்போது ஈரானின் பாதுகாப்பில் பிணைக் கைதிகளாக (Hostages) வைக்கப்பட்டுள்ளனர்.

​அமெரிக்காவின் பொய் முகம்: சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை "போரில் கொல்லப்பட்டனர்" (Killed in Action) என அமெரிக்கா பொய்க்கணக்கு காட்டி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

​அமெரிக்காவின் மறுப்பும் - 'டெல்டா' படை நகர்வும்:
​இந்தச் செய்தியை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஈரானின் வெறும் "ஏமாற்று வேலை" மற்றும் "பொய்ப் பிரச்சாரம்" என அது வர்ணித்துள்ளது.

​இருப்பினும், பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது:
​டெல்டா ஸ்பெஷல் ஃபோர்ஸ் (Delta Force): சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீரர்களை மீட்க அமெரிக்காவின் மிக ரகசியமான மற்றும் சக்திவாய்ந்த 'டெல்டா' சிறப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

​ரகசியத் திட்டம்: ஈரான் எல்லைக்குள் புகுந்து மின்னல் வேகத்தில் மீட்பு நடவடிக்கையை (Rescue Mission) மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

​பதற்றத்தில் உலக நாடுகள்:
​ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அமெரிக்க தளங்களைத் தாக்கி வரும் ஈரான், இப்போது வீரர்களைச் சிறைபிடித்துள்ளதாகக் கூறுவது போரின் போக்கை மாற்றக்கூடும்.

ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அமெரிக்கா தனது வீரர்களை மீட்க மிகப்பெரிய தரைப்படைத் தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேலிய பத்திரிகையாளர் ஆலோன் மிஸ்ராஹி:
டிரம்ப் உலகுக்கு பொய் சொல்லி வருகிறது நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு
தாம் வெற்றி பெறுவது போன்ற
தவறான உணர்வை உருவாக்குகிறார்.
ஈரானின் தாக்குதலுக்கு முன் எதுவும் செய்ய முடியாமல் இஸ்ரேல் அழிந்து கொண்டிக்கிறது என்பது தான் உண்மை.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தேவை இல்லாத இடத்தில் கைவத்து தனது மானத்தை கப்பலில் ஏற்றிக்கொண்டு இருக்கிறது..
அமெரிக்காவுக்கு தற்போது தன்மனப் பிரச்சினை ஏற்பட்டது இருக்கிறது தான் உலகுக்கு நாட்டாமை எங்கு என்ன நடந்தாலும் நாங்கள் தான் தீர்த்து வைக்கிறோம் என்ற நிலையில் ஈரானிடம் தோற்று போனால் அது அவர்களுக்கு தன்மான பிரச்சினை என்று நினைக்கிறார்கள்.
அதற்கான காரணம் அவர்கள் தேவை இல்லாத இடத்தில் கை வைத்தால் இப்படி தான் நடக்கும்

#உலகசெய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி சாக்பாயிண்ட்களில் ஒன்றாகும் - உலக எண்ணெய் மற்றும் எல்என்ஜி ஏற்றுமதிகளில்...
08/03/2026

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி சாக்பாயிண்ட்களில் ஒன்றாகும் - உலக எண்ணெய் மற்றும் எல்என்ஜி ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 20% ஒவ்வொரு நாளும் இந்த குறுகிய நீர்வழி வழியாக செல்கிறது. அது மூடப்பட்டால், வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீதான பாதிப்பு உடனடியாகவும் கடுமையாகவும் இருக்கும்.

ஜேபி மோர்கன் பகுப்பாய்வின்படி, பல வளைகுடா நாடுகளில் எண்ணெய் சேமிப்பு விரைவாக நிரப்பப்படும், ஏனெனில் ஏற்றுமதிகள் பிராந்தியத்தை விட்டு வெளியேற முடியாது. சேமிப்பு தொட்டிகள் நிரம்பியவுடன், உற்பத்தி குறைப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். சேமிப்பகம் முடிவடைவதற்கு முன்

மதிப்பிடப்பட்ட நேரம்:
• ஈராக் - சுமார் 6 நாட்கள்
•குவைத் - சுமார் 14 நாட்கள்
.UAE தோராயமாக 16-19 நாட்கள்
கத்தார் - சுமார் 20 நாட்கள்
•சவூதி அரேபியா - மாற்று குழாய்கள் மற்றும் துறைமுகங்கள் மூலம் சில ஏற்றுமதிகளை மாற்றியமைக்க முடியுமா என்பதைப் பொறுத்து 36-65 நாட்கள். அதனால்தான் ஜலசந்தி மிகவும் முக்கியமானது.

அடைப்பு நீண்ட காலம் நீடித்தால், ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பீப்பாய்கள் உலகளாவிய விநியோகத்தில் இருந்து மறைந்துவிடும், மேலும் எண்ணெய் விலைகள் உயரும் மற்றும் வளைகுடா உற்பத்தியாளர்கள் கிணறுகளை மூடுவதற்கு அல்லது உற்பத்தியைக் குறைக்க கட்டாயப்படுத்தலாம்.

சுருக்கமாக: ஹார்முஸ் எவ்வளவு நேரம் மூடப்படுகிறதோ, அவ்வளவு வேகமாக உலகின் ஆற்றல் அமைப்பு அழுத்தத்தை உணரத் தொடங்குகிறது.
Follow 👉 Today News Tamil
#உலகசெய்திகள்

  ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்பு , ஈரானையும் , உலகையும் அமெரிக்க பயமுறுத்த பயன்படுத்திய போர்க்கப்பல்தான் uss ஆபிரஹா...
08/03/2026


ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்பு , ஈரானையும் , உலகையும் அமெரிக்க பயமுறுத்த பயன்படுத்திய போர்க்கப்பல்தான் uss ஆபிரஹாம் லிங்கன். “ஆபிரஹாம் லிங்கன் புறப்பட்டுவிட்டது. ஓமானை அடைந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஈரானை அண்மித்துவிடும். அதற்குள் ஈரான் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றால். ஆபிரஹாம் லிங்கன் இடமிருந்து ஈரானை காப்பாற்ற முடியாது. ஆபிரஹாம் லிங்கனை ஈரானின் ஏவுகணைகளால் ஒன்றும் செய்ய முடியாது. அணுகுண்டு கொண்டு தாக்கினாலும், கொஞ்சமும் அசையாதது ஆபிரஹாம் லிங்கன் “

இப்படி ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட ஆபிரஹான் லிங்கன் போர்க்கப்பல் இந்தப் போரில். ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. போர் தொடங்கிய ஆரம்பத்திலேயே 4 ballistic missiles கொண்டு ஈரான் ஆபிரஹான் லிங்கனை தாக்கியதாக அறிவித்தது. ஆனால் அப்படி ஒரு தாக்குதலும் நடக்கவில்லை என அமெரிக்கா மறுத்தது. பின்னர் strait of Hormuz இல் எந்தக் கப்பலையும் அனுமதிக்கமாட்டோம் . மூடி வைத்துள்ளோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்து தடுத்து வந்தது. அதற்கு டொனால்ட் ட்ரம்ப் நான் பாதுகாப்பு தருகிறேன் கப்பல்கள் அச்சமின்றி வாருங்கள் என அறிவித்துவிட்டு, உடனடியாக ஆபிரஹாம் லிங்கனை ஹோர்மோஸ் ஜலசந்திக்கு அருகில் அனுப்பி வைத்தார். பட்ட காலிலே படும் என்பது போல ஆபிரஹாம் லிங்கனை சராமரியாக தாக்கியது ஈரான். பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பது போல ஆபிரஹாம் லிங்கன் 1000 km இற்கு அப்பால் சென்று ஒழிந்து கொண்டது. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக அமெரிக்கா தொடர்ந்தும் இதை மறுத்து வந்தது. ஈரான் ராணுவப்படை தாக்கப்பட்ட ஆபிரஹாம் லிங்கனின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளது. சேம்..சேம்.. பப்பி சேம் ட்ரம்ப்…
#உலகசெய்திகள் Vs

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இஸ்ரேலை உலகளவில் தனிமைப்படுத்த வேண்டும் எனக் கருத்துஇத்தாலி பிரதமரான Giorgia Meloni மே...
08/03/2026

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இஸ்ரேலை உலகளவில் தனிமைப்படுத்த வேண்டும் எனக் கருத்து

இத்தாலி பிரதமரான Giorgia Meloni மேற்கத்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுகின்றன என்றும், அதனால் இஸ்ரேல் மீது உலகளாவிய தனிமைப்படுத்தல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அல்லது போருக்கு எதிரான செயற்பாட்டாளரிடமிருந்து வந்ததல்ல. மேற்கத்திய அரசியல் அமைப்பில் முக்கிய பங்காற்றும் ஒரு பாதுகாப்பு நோக்குடைய (Conservative) ஐரோப்பிய தலைவரிடமிருந்து வந்துள்ளது என்பது அரசியல் ரீதியாக கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Italy நாட்டின் பிரதமரான மெலோனி, மேற்கத்திய கூட்டணிகளுடன் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டு வரும் தலைவராகக் கருதப்படுகிறார். இத்தாலி NATO அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறுகின்றன என வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அதனை உலகளவில் தனிமைப்படுத்த வேண்டுமெனக் கூறியிருப்பது மேற்கத்திய அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படுகின்றதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்த சர்வதேச கூட்டணியில் பிளவுகள் தோன்றத் தொடங்கியுள்ளன எனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Spain தனது இராணுவத் தளங்களை பயன்படுத்த அனுமதிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், NATO கூட்டணியினரிடையிலும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஒரு முக்கிய மேற்கத்திய பாதுகாப்பு நோக்குடைய தலைவர் இஸ்ரேல் நடவடிக்கைகளை சர்வதேச சட்ட மீறலாக குற்றஞ்சாட்டியிருப்பது, சர்வதேச அரசியல் நிலவரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்த நாடு உலகளவில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? உங்கள் கருத்துகளை கீழே பகிரலாம்.


#உலகசெய்திகள்

   #உலகசெய்திகள் பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க டிரம்ப் தனது மகன் பரோன...
06/03/2026

#உலகசெய்திகள்
பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க டிரம்ப் தனது மகன் பரோனை அனுப்ப வேண்டும் என்று கோரி அமெரிக்காவில் இப்போது பெரிய பிரச்சாரம் நடந்து வருகிறது

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவால் இயக்கப்படும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு தளத்தை ஈரான் தாக்கியதாக டிராப் சைட்...
06/03/2026

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவால் இயக்கப்படும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு தளத்தை ஈரான் தாக்கியதாக டிராப் சைட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
#உலகசெய்திகள்

கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்குத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!https://skytamilnews.com/archives/11926க...
06/03/2026

கத்தாரில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்குத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

https://skytamilnews.com/archives/11926

கத்தாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தூதரகத்துடன் பதிவு செய்து கொள்ளுமாறு தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தரவுச் சேகரிப்பு முன்னெடுக்கப்படுவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை (Google Form) பூர்த்தி செய்து, கத்தாரில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் தமது விபரங்களை உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உங்கள் விபரங்களைச் சமர்ப்பிக்கலாம்:
🔗 https://forms.gle/GsazicAeZue3KYyt9

முக்கிய குறிப்புகள்:
இந்தப்பதிவு தற்போது கத்தாரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
#உலகசெய்திகள்

Address

Sir Lanka
Puttalam
61300

Alerts

Be the first to know and let us send you an email when தேசிய ஜனநாயக மக்கள் காங்கிரஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category