ஆரோக்யா வேளாண் அங்காடி - Arogya Angaadi

  • Home
  • ஆரோக்யா வேளாண் அங்காடி - Arogya Angaadi

ஆரோக்யா வேளாண் அங்காடி - Arogya Angaadi இயற்கை வேளாண் உணவுப் பொருட்களின் விற்பனையகம்
(பாரம்பரிய அரிசி முதல் பாதுகாப்பான அத்தனையும்...)

"இன்னொரு மலை இன்னொரு நதி"எனது புதிய நூல்"பயணங்கள் உங்களை பேச்சு இல்லாமல் வாயடைக்க வைக்கும். பின் அவை உங்களை கதை சொல்லி ஆ...
13/01/2024

"இன்னொரு மலை இன்னொரு நதி"
எனது புதிய நூல்

"பயணங்கள் உங்களை பேச்சு இல்லாமல் வாயடைக்க வைக்கும். பின் அவை உங்களை கதை சொல்லி ஆக்கும்" என பயணங்கள் குறித்து ஐயன் பட்டூடா சொல்லிய கூற்று ஒன்று உண்டு. ஆம்! நம்மை தொலைக்கும் தருணங்கள் பயணங்களில் மட்டுமே நிகழும். அதற்கு கிராண்ட் கானியனின் விளிம்பில் பயணிக்க வேண்டும் என்றில்லை. கும்பகோணம் அரசலாற்றின் ஓரம் நின்று காவிரியை பார்த்துக் கொண்டே நிற்கையிலும் தொலைந்து போக முடியும். 5A அந்தோணி பஸ் சர்வீஸில் ஏறி டவுன் வாகையடி முக்கில் இறங்கி இலட்சுமி தியேட்டர் போகும் பயணத்திலும் , ஆத்தங்கரை பள்ளிவாசல் பஸ்ஸில் ஒடிசலான மூலைக்கரைப்பட்டி சாலையை கடக்கும் பயணத்திலும் என் சிறுவயது சிலாகிப்புகள் மவுனங்கள் நிறையவே உண்டு. அந்தப் பேருந்துகளின் ஜன்னலோரங்கள் எனக்கான அப்போதைய அரசமரத்தடிகள்.

"ஏம்ப்பா இப்படி கிங் சைஸ் படுக்கையிலும் ஒருபக்கமாய் ஓரமாய் விளிம்பில் படுக்கிறீங்க?" என என் பெண் வசைபாடியபோது, "இரயில் பர்த்தில்/ விமான இருக்கையில், ஒடுக்கிப்படுத்து 'அக்கடா' என கை காலை விரித்துப் படுத்தல் மறந்தே போயிற்று" என விளங்கிற்று. ஆனால் இந்த இருபது வருட பயணத்தின் போதான உறக்கத்தின் கனவுகள் விரிந்தவை வேறுவிதம். தேம்ஸ் நதியோர க்யூ கார்டனிலும், நீலகிரி மலைக்காடுகளிலும் மரங்களுடன் பேசியவை என் மூளையின் மொழி மையம் மட்டுமே அறிந்த கவிகளாயிற்று. மறுபடி மறுபடி பயணிக்க, என்னை உந்தும் டோப்பமின்கள் அந்த மையத்தில் புதைந்திருக்கும் கவிதை வரிகளின் உசுப்பலாலேயே நிகழ்கின்றது.

இந்த தொகுப்பும் ஒவ்வொரு சிறு பெரும் பயணத்தினை மனசு அசை போட்ட தருணங்களில் கொஞ்சம் வசீகரித்து எழுதியவையே. மறுபடி எடுத்து வாசிக்கையில் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொள்கிறது. மனசுக்குள் பரவசம் பீச்சுகின்றது. கத்தரிப்பூ பாவாடை அணிந்த குட்டிக்குழந்தை ஒன்று நம் விரல் பற்றி "வாங்க மாமா" என இழுத்துச் செல்லும் சிலாகிப்பு அனுபவம் கிட்டுகின்றது. முக நூலில் இதனை அவ்வப்போது பகிர்ந்த போது வாசகர்கள் "நாங்களும் உங்களோடு பயணித்த உற்சாகம் " என எழுதியதில் இந்த உளப்பிரவாகை வாசிக்கும் நம் நட்பு உள்ளங்களுக்கும் நிச்சயம் கிட்டும் என தோன்றிற்று.

ஒரு வேளை இந்த வாசிப்பு, உங்களை அந்தமானுக்கோ ஃபீனிக்ஸிற்கோ ஒருசமயம் அழைத்துச் செல்லுமானால், அது இந்த நூலுக்கு கிடைத்த வெற்றி. ஒரு வேளை இந்த வாசிப்பு இன்னும் உங்களை இன்னொரு தளத்திற்கு உயர்த்திட, உங்களின் மடித்துவைக்கப்பட்டிருக்கும் சிறகுகளைச் சிலுப்பி விரிக்குமானால், அது பேரானந்தம்.

முக நூலில் மட்டும் நான் எழுதிப் பகிர்ந்திருந்த இக்கட்டுரைகளைச் செம்மைப்படுத்தி தொகுத்து நூலாக்கிட உதவிய நண்பர் அறிவழகன் அவர்க்கும், அச்சிட்டு நூலாக்கி புது வடிவம் கொடுத்திட்ட டிஸ்கவரி நூலக வெடியப்பன் அவர்கட்கும், மனமார்ந்த நன்றிகள்.

"பயணிக்க வேண்டும் , பயணங்களை வாசிக்கவேண்டும், ஒவ்வொரு பயணத்திலும் சந்திக்கும் வேற்று நிலத்தின் மனிதனுள் ஒளிந்திருக்கும் சகமனிதனின் வாழ்வியலை, அவன் சமூகத்து அறத்தை, அச்சமூகம் உலகில் கட்டி எழுப்பிய நாகரீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்" என தன் வசீகர எழுத்துக்களால் கற்றுத்தந்த, பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ரா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பது எனக்கு பெரும் பேறு. மதிப்புமிகு எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஐயாவிற்கு மனார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!

இன்னொரு மலை இன்னொரு நதி- இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில்...

கிடைக்குமிடங்கள்

F 55 - டிஸ்கவரி புக் பேலஸ்
66,67 - டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
395,396- பூவுலகின் நண்பர்கள்

மகிழ்வான பொழுதுகளைத் துவங்குகையில்,  இயற்கையை வணங்கியும் ஆராதித்தும் நன்றி சொல்லியும் துவங்குவது தமிழ் மரபு. தமிழர் மரபு...
03/12/2023

மகிழ்வான பொழுதுகளைத் துவங்குகையில், இயற்கையை வணங்கியும் ஆராதித்தும் நன்றி சொல்லியும் துவங்குவது தமிழ் மரபு. தமிழர் மரபு!
மகளின் திருமணம் என்பது, இல்வாழ்வின் உச்ச மகிழ்ச்சியில் ஒன்று. தோளில் சுமந்த பிள்ளை, இன்னொரு தோள் சாயும், இன்னொருவருக்குத் தோள் கொடுக்கும் உறவைத் தொடும் சமயம் பெற்றோரின் மனமும் மகிழ்வில் வானம் தொடும்.

" பந்தக்கால் கட்டியாச்சா? அரசாணைக்கால் கட்டுங்க; பாலை மரம் கட்டோணும். ஆலும் அரசும் அத்தியும் மணப்பந்தலில் கட்டாயம் இருக்கணும்", என்ற கேள்விகள் சூழ்ந்த நாட்களில், சுத்தமான காற்றை, வளமான மண்ணை, செறிவான உயிர்வாழ் சத்துக்களை, கனிகளை, விதைகளை நமக்கு சத்தமில்லாமல் சுகந்தமான மணத்தோடு தினம் தந்துகொண்டிருக்கும் மரங்களைப் போற்றுதல் எத்தனை பொருத்தமானது!

இந்த அழகிய நிகழ்வை மகிழ்ந்து, ரசித்து, வணங்கி, நன்றி கூறி நேசித்துக் கொண்டாடினால் என்ன? என ஒரு எண்ணம் மனதில் ஓடியது. எண்ண ஓட்டத்தை, "கல்யாணத்தை ஒட்டி நாம் வனம் செய்யலாமே?!" என நான் நண்பர் பாரியிடம் சொல்ல, " அட! ஆயிரம் மரம் நடுவோம் வாங்க," என செந்தூர்பாரியின் வசீகரக்குரல் உறுதிசெய்து, இன்று மரம் நடுவிழா பேரழகாய் நடந்தேறியது.

இரவெல்லாம் கொட்டும் மழை, இன்னும் கொஞ்ச நேரத்தில் தீவிர புயலின் துவக்கம் என சென்னை குளிர்ந்துகொண்டிருக்க, சென்னையின் புழல் ஏரியை அடுத்த "முல்லைவனத்தில்" இன்று மரம் நடுவிழா! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை 30க்கும் மேற்பட்ட "சூழல் காதல் அமைப்புகள்", கிட்டத்தட்ட 300 பேர்களுடன் குதூகலமாய் இளங்காலையிலேயே வந்து நிற்க, முன்பு அங்கு ஏற்கனவே நாங்கள் நட்டிருந்த பல ஆயிரம் மரங்களுக்கும் உறவைப்பார்த்த பேரானந்தம். தெருவெல்லாம் வாசக்கதவின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கிராமத்துப் பெண்கள் போல, வேம்பும் கொய்யாவும் அத்தியும் மணமக்களை எட்டிப்பார்த்து மகிழ்ந்தன.

இளவல்கள் இருவரும் , தாங்கள் கைகோர்க்கும் இனிய இல்லற விழாவை முன்னிட்டு, சிறு வனம் ஒன்றினை தங்கள் நேசக் கரங்களால் துவக்கிட, ஒரு பிடி மண் பிடித்து, ஒரு சிறுசெடி தன் தாய் மடிக்குத்தந்து துவக்கினர். இந்த அழகிய நிகழ்விற்கு, மணமக்களுடன் ஆர்ப்பரித்து மகிழ, ஆயிரம் மரங்கள் உடன் தாய்மடியில் நடப்படுகின்றன. (இன்றே கிட்டத்தட்ட மழைத்தூறலுக்கு நடுவேயும் 500 நட்டாயிற்று). இவர்களின் இல்லறம் எல்லா வளத்துடன் அறம் சார்ந்து செழிக்கையில், இவ்வாயிரம் மரங்கள் கோடி உயிர்களுடன் குதூகலமிடும். நெல்லியும் கொன்றையும் வாகையும் விரிந்து நிற்கும் அந்த "ஆரோக்கிய வனத்தில்", கொண்டாடிக் கூவும் ஓசினிச்சிட்டுக்களின் ஓசையினை மணநாளின் ஆலாபனையாக இவர்கள் என்றும் கேட்பர். . இந்த அழகிய முன்னெடுப்பை இனி எந்த திருமணத்திற்கு செய்ய முன்வந்தாலும், பாரியும் அவரோடு உள்ள அத்தனை இயற்கையின் காதலர்களும் கூடவே நானும் எப்போதும் நிற்போம்! வனம் செய்தல்- அறம் செய்தல்; மரம் நடுதல் - நலம் பெருக்கல்!

இனி உங்கள் வீட்டுத் திருமணத்தில் விதை கொடுத்தல் செடி கொடுத்தலோடு வனம் கொடுத்தலும் செய்யலாம்!

Address

B-7, First Main Road, Mugappair Eri Scheme, Mugappair East

600037

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+917299045880

Alerts

Be the first to know and let us send you an email when ஆரோக்யா வேளாண் அங்காடி - Arogya Angaadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஆரோக்யா வேளாண் அங்காடி - Arogya Angaadi:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share