10/09/2022
மாகாளிக் கிழங்கு, வேர் வகையைச் சேர்ந்தது என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரத்தக்கட்டு, வாதம், காயம், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது.
மாகாளிக் கிழங்கு, நச்சுகளை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்னை உள்ளவர்கள் உப்பு, எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அப்படியானால் ஊறுகாய் வகைகள் அனைத்தையுமே அவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும். ஆனால் மாகாளிக்கிழங்கு ஊறுகாயை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உப்பை அறவே தவிர்க்க வேண்டுமென நினைப்பவர்கள், ஊறுகாய் தயாரிக்க இந்துப்பைப் பயன்படுத்தலாம்.
உடல் சூட்டைக் குறைக்க உதவும்; பசியை அதிகரிக்கும்; செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும்.
சில நேரங்களில், சரும ஒவ்வாமைக்கான மருந்தாகவும் மாகாளிக்கிழங்கு பரிந்துரைக்கப்படுவதுண்டு. இதிலுள்ள சில வேதிப்பொருள்கள் மூட்டு வலியைக் குறைக்க உதவும்.