26/05/2026
அனைவருக்கும் வணக்கம்,
. எங்களிடம் பல தானிய விதைகள் கிடைக்கும். பல தானிய விதைகளை விதைப்பதால் மண்ணில் நுண்ணுயிரிகள் அதிகமாகப் பெருகி மண் வளம் மிக்கதாக மாறுகிறது.
ரசாயன உரங்கள் பயன்படுத்திய நிலத்தை மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கு பல தானிய விதைகள் உதவுகிறது.
பல தானிய விதைகளை விதைப்பதால் பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
பல தானிய விதைகளில் சேர்க்கப்படும் விதைகள்.
தானிய விதைகள்.
1. கம்பு,
2. கேழ்வரகு,
3. சோளம்,
4. மக்காச்சோளம்.
எண்ணெய் வித்துக்கள்.
1. சூரியகாந்தி,
2. ஆமணக்கு,
3. எள்,
4. நிலக்கடலை.
நறுமணப் பயிர்கள்.
1. கடுகு,
2. வெந்தயம்,
3. சோம்பு,
4. கொத்தமல்லி.
பருப்பு வகைகள்.
1. துவரை,
2. உளுந்து,
3. கொள்ளு,
4. காராமணி.
பசுந்தாள் பயிர்கள்.
1. சணப்பு,
2. தக்கைப் பூண்டு,
3. நரிப்பயறு,
4. அகத்தி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 20 வகையான விதைகளையும் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதம் பலதானிய விதைப்புக்காக விதைக்க வேண்டும். 25 கிலோ எடை கொண்ட பல தானிய மூட்டையின் விலை ரூ. 2825.
இந்த விதைகளை விதைத்ததில் இருந்து 45 முதல் 50 நாட்களுக்குள் பூ பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
பலதானிய விதைகள் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பல தானிய விதைகள் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அல்லது வாட்ஸ் அப் செய்ய வேண்டிய அலைபேசி எண் - 9952595526.