இரா.செல்வவில்லாளன் TPK FANS CLUB

இரா.செல்வவில்லாளன் TPK FANS CLUB TIRUCHENGODE

உலகத் தொழில்நுட்பத்திற்கு நிகரான ரிக் தயாரிப்பு நிறுவனத்தை வழிநடத்தும் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்,கொரோனா பெருந்தொற்றின்...
07/01/2026

உலகத் தொழில்நுட்பத்திற்கு நிகரான ரிக் தயாரிப்பு நிறுவனத்தை வழிநடத்தும் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்,

கொரோனா பெருந்தொற்றின் போது எளிய மக்களுக்கு உதவிகரம் நீட்டிய
மனிதநேய பண்பாளர்,

திருச்செங்கோட்டின் பெருமைமிகு அடையாளம்..
PRD RIGS பரந்தாமன் sir🥰 அவர்களின் பிறந்தநாளில்... மிகச் சிறந்த பண்புகளை நினைவூட்டி அண்ணார் அவர்களுக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைமை குழு சார்பாக., நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தோம் 🥰❤️

இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் புலிகளின் தளபதி நாகை  #திருவள்...
08/10/2025

இன்று சேலம் மாவட்டத்தில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர்
புலிகளின் தளபதி
நாகை #திருவள்ளுவன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ...

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% உயர்த்த கோரி..... உயிரை ஆயுதமாக்கிய உன்னத போராளிதோழர் "நீலவேந்தன்" வீரவணக்க நாளில்.......
26/09/2025

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை 6% உயர்த்த கோரி.....
உயிரை ஆயுதமாக்கிய உன்னத போராளி
தோழர் "நீலவேந்தன்" வீரவணக்க நாளில்....

பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பை சட்டத்தை ( வன்கொடுமை தடுப்புச் சட்டம்) தீவிரமாக நடைமுறைபடுத்த வலியுறுத்தி.... திருச்செங்கோடு
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில்... "கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் " அண்ணாசிலை அருகில் நூற்றுக்கணக்கான தோழர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 #நாமக்கல் மாவட்டம்  #திருச்செங்கோடு  #தமிழ்ப்புலிகள்
26/09/2025

#நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு #தமிழ்ப்புலிகள்

29/08/2025

தமிழ் புலிகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர்

*அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு (SCA) முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும...
29/08/2025

*அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு (SCA) முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தற்போது இளநிலை பொறியியல் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வில் அருந்ததியர்களுக்கான உள்இட ஒதுக்கீட்டில் 963 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்து அதில் 796 இடங்களை இதரபட்டியல் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கி கலந்தாய்வு முடிவுற்றதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்ற அருந்ததியர் சமூகம் சமநிலையை அடைய வேண்டும் என்பதற்காக கால் நூற்றாண்டுக்கும் மேலான பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அருந்ததியர்களுக்கு மூன்று விழுக்காடு முன்னுரிமை அடிப்படையிலான உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு அருந்ததியர் சமூக மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஓரளவு பயன்பெறத் துவங்கினர். ஆனால் வேலைவாய்ப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் அருந்ததியர்களில் தகுதியான நபர்கள் இல்லை என்பதாக கூறி அந்த பணியிடங்களில் இதரபட்டியல் இனத்தவர்கள் நிரப்பப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது இளநிலை பொறியியல் கலந்தாய்வில் 963 அருந்ததியர்களுக்கான உள்இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியான நபர்கள் இல்லை என்பதாக கூறி 796 இடங்களை இதர பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கி தொழில்நுட்ப கல்வி இயக்கம் கலந்தாய்வை நிறைவு செய்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
இந்த கலந்தாய்வை அருந்ததியர்களில் தகுதியானவர்கள் இல்லையென்பதாக கூறி மற்றவர்களுக்கு அவரசகெதியில் வழங்கவேண்டிய அவசியமில்லை. எனவே மறுஅறிவிப்பை வெளியிட்டு அருந்ததியர் மாணவர்களை கலந்தாய்விற்கு அழைக்கவேண்டுமென்று தமிழ்ப்புலிகள்கட்சி வலியுறுத்துகிறது.

உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட காலந்தொட்டு சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து அதனை கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்ப்புலிகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை தகுதியான நபர்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுமாயின் அந்த இடங்களுக்கு அருந்ததியர்களில் தகுதியான நபர்களை உருவாக்குவதற்காகவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.

உள்இட ஒதுக்கீடு வழங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் அருந்ததியர்களில் தகுதியான நபர்கள் இல்லை என்பதாக கூறி அந்த இடங்களை இதர பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்வது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு(SCA) முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதனை சிறப்பு கண்காணிப்புக்குழு அமைத்து அதனை கண்காணித்து முழுமையாக உள்இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.

நாகை.திருவள்ளுவன்
தலைவர்
தமிழ்ப்புலிகள் கட்சி

நாள்: 28.08.2025
இடம்: கோவை

தமிழ்ப்புலிகள் கட்சியின் திருச்செங்கோடு தொகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் 20/07/25 இன்று காலை 11 மணியளவில் திருச்செங்கோடு ...
20/07/2025

தமிழ்ப்புலிகள் கட்சியின் திருச்செங்கோடு தொகுதி மாவட்ட செயற்குழு கூட்டம்

20/07/25 இன்று காலை 11 மணியளவில் திருச்செங்கோடு கே எம் மஹாலில்
நடைபெற்றது.

திருச்செங்கோடு தொகுதி மாவட்ட செயலாளர் தோழர் அ.சுரேஷ் அவர்கள் தலைமையில்...

திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர்., மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் முன்னிலையில்...

சரவணன் நகரச் செயலாளர் திருச்செங்கோடு வரவேற்புரை
ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்கள்; மாநில து.பொதுச்செயலாளர் இரா செல்வகுமார்

மாநில செய்தி தொடர்பாளர் செந்தமிழன்

மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் பிரபாகரன்

சேலம் நாமக்கல் மண்டல து.செயலாளர் சிவசங்கர்

ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் நிறைவாக கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் நன்றியுரையாற்றினார்..!

இன்று சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 220 ஆம் ஆண்டு நினைவஞ்சலி...மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர்  சு.முத்து...
17/07/2025

இன்று சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 220 ஆம் ஆண்டு நினைவஞ்சலி...

மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும்

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அவர்களும்

தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களும்

புதிய திராவிடர் கழக நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் அவர்களும்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞரணி செயலாளர் எஸ் சூரியமூர்த்தி அவர்களும்

மற்றும் அனைத்து கட்சி இயக்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவீரன் பொல்லான் மணிமண்டபம் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட மாவீரன் பொல்லான் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்....

அனைவரையும் சமூகநீதி மக்கள் கட்சி - மாவீரன் பொல்லான் பேரவை நிறுவனத் தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் வரவேற்று மகிழ்ந்தார்...

08/07/2025
27/06/2025

காவல்துறையை கண்டித்து நாமக்கல் கண்டன பொதுக் கூட்டத்தில் கண்டன உரை

Address

Tiruchengodu

Alerts

Be the first to know and let us send you an email when இரா.செல்வவில்லாளன் TPK FANS CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category