24/06/2025
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.கல்முனை மாநகரில் கருணை நிறை தெய்வமாக எல்லோரும் இரந்து இருகைகூப்பித் தொழும் வல்ல வினையறுத்து வாழ வைக்கும் அல்லல் அறுத்து ஆனந்தம் தரும் அன்னை பெரிய நீலாவணை பேச்சி அம்மனின் ஆனி உத்திர திருச்சடங்குப் பெருவிழா 25/06/2025 புதன் கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி;27/06/2025 வெள்ளிக்கிழமை ஊர்க்காவல் திருச்சடங்கும் 01/07/2025 புதன் கிழமை கன்னிக்கால் திருச்சடங்கும்..04/07/2025 அன்று பால் பானை எடுக்கும் திருச்சடங்கும் இடம்பெற்று அன்னையவளின் 2025 ஆம் ஆண்டிற்கான திருச்சடங்கானது 5/7/2025 சனிக்கிழமை காலை பள்ளையத் திருச்சடங்கோடு இனிதே நிறைவு காண அன்னையருள் கைகூடியுள்ள இந்த புனிதமான நாட்களில் அன்னை அடியார்கள் பேசும் தெய்வமென்று போற்றப்படும் பிரசவத்திலும் பிள்ளைகளைக் காப்பதிலும் மாதவர் வேண்டுதலை மனதார நிறைவேற்றிடும் நமது குலதெய்வமாய் கோயில் கொண்ட பெரியாச்சியெனும் பேச்சியின் திருவருட் கடாச்சத்தினை பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.பெரிய நீலாவணை மகாவிஷ்ணு பேச்சியம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையினர்.ஓம் சக்தி!